பிரதமர் அலுவலகம்

மும்பையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 29 SEP 2017 1:15PM by PIB Chennai

மும்பையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மும்பையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்.

மும்பை நிலவரம் குறித்து மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது. ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நிலைமையை ஆராய்ந்து வருகிறார். அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்து வருகிறார்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



(Release ID: 1504420) Visitor Counter : 93


Read this release in: English