பிரதமர் அலுவலகம்

ஹைஃபா நகரை விடுவிக்க 1918ல் தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய போர் வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

Posted On: 23 SEP 2017 5:22PM by PIB Chennai

ஹைஃபா நகரை விடுவிக்க 1918ல் தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய போர் வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“ஹைஃபாவை விடுவிக்க தங்கள் இன்னுயிரை ஈந்த வீரமிக்க இந்திய போர்வீரர்களுக்கு ஹைஃபா தினத்தன்று நான் வணக்கம் செலுத்துகிறேன்.

ஜூலை மாதம் ஹைஃபாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் வாய்ப்பினைப் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



(Release ID: 1503878) Visitor Counter : 88


Read this release in: English