பாதுகாப்பு அமைச்சகம்

விமானப் படைத் தளபதியின் ஆஸ்திரேலியா பயணம்

Posted On: 20 SEP 2017 6:24PM by PIB Chennai

விமானப்படைத் தளபதி ஏர்சிப் மார்ஷல் பிரேந்தர் சிங் தானோவா இம்மாதம் 19 –ம் தேதி முதல் 22 –ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளின் விமானப் படைகளிடையே ஏற்கனவே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த பயணம்.

     இந்த பயணத்தின் போது அவர் ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை உயர் அதிகாரிகளுடன் தற்போதைய புவியியல், அரசியல் சூழ்நிலையில் இரண்டு நாட்டு விமானப்படைகளும் எதிர்க்கொள்ளும். பாதுகாப்பு சவால்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிவகைகள் குறித்து பேச்சு நடத்துவார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, இருநாட்டு விமானப் படைகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பில் வேறு புதிய அம்சங்கள் குறித்து ஆராய்வது ஆகியன இந்த பயணத்தில் முக்கிய கவனம் பெறும்.

     இந்த பயணத்தில் இந்திய விமானப்படைத் தளபதி ஆஸ்திரேலிய ராயல் விமானப்படையின் தலமையிடத்துக்கும், செயல்பாட்டு நிலையில் உள்ள விமான தளங்களுக்கும் சென்று பார்வையிடுவார்.

*****



(Release ID: 1503785) Visitor Counter : 94


Read this release in: English