குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஷெட்யூல்ட் வகுப்பு / பழங்குடியின தொழில் முனைவோருக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்த மொத்தமான ஒருங்கினைந்த நடவடிக்கைகள் அவசியம்: குடியரசுத் துணைத் தலைவர்
தேசிய ஷெட்யூல்ட் வகுப்பு – பழங்குடியினர் மத்திய கூட்டத்தில் உரை.
Posted On:
20 SEP 2017 5:14PM by PIB Chennai
நாட்டில் ஷெட்யூல்ட் வகுப்பு / பழங்குடியின தொழில் முனைவோருக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்த மொத்தமான ஒருங்கினைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. என். வெங்கைய நாயுடு கூறியிருக்கிறார். மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செப்டம்பர் 20 – ம் தேதி புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த தேசிய ஷெட்யூல்ட் வகுப்பு – பழங்குடியினர் மத்திய கூட்டத்தில் அவர் உரையாற்றினார். மத்திய சமுக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர்சந்த் கேலாட், மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஜூவல் ஓரம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் (பொறுப்பு) திரு. கிரி ராஜ் சிங், நிதித் துறை இணை அமைச்சர் திரு. சிவ்பிரதாப் சுக்லா மற்றும் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை கீழே தரப்பட்டுள்ளது:
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஏற்பாடு செய்துள்ள தேசிய ஷெட்யூல்ட் வகுப்பு – பழங்குடியினர் மத்திய கூட்டத்தில் பங்கேற்று இவ்விஷயம் தொடர்பாக அக்கறை உள்ள அனைவருடனும் கலந்துரையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் நலிந்த நிலையில் உள்ள, வாய்ப்பு வசதிகள் அற்ற பிரிவினர் மேம்பாடு அடைந்தால்தான் நாடு மேம்பாடு அடையும். அப்போதுதான் மகாத்மா காந்தி, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார், பண்டித் தீன் தயாள் உபாத்யாயா, அரசின் பெரிய நோக்கமான “அனைவரும் இணைந்து அனைவரும் முன்னேறுவோம்” ஆகியோரின் கனவு நனவாகும். அச்சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் மேம்பாடு அடைந்தால் அன்றி மேம்பட்ட நாட்டை உருவாக்குவது இயலாது. மேம்பாடு அனைவரையும் சென்றடைந்தால் தவிர மேம்பாடு என்பதற்கு பொருள் ஏதும் இல்லை. நாட்டின் மேம்பாட்டில் தமக்கு அக்கறை உள்ளது என்று ஒவ்வொருவரும் உணரும் நிலை வர வேண்டும். நாட்டின் மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்த, பல பரிமாணங்கள் கொண்ட மேம்பாட்டு அலுவல் பட்டியல் அவசியம். நாட்டின் மேம்பாட்டிற்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது முக்கியமானது. இதனால் வேலையின்மைப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும், வருவாய் உயரும். தொழில் துறையும், விவசாயமும் மக்களின் இரு கண்கள். நாட்டின் ஒட்டு மொத்த மேம்பாட்டிற்கு இந்த இரண்டும் மிக முக்கியமானவை. “அனைவரும் இணைந்து அனைவரும் முன்னேறுவோம்” என்ற கனவு நனவாக பெரிய தொழில்களுடன் சேர்ந்து சிறு தொழில்களையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
நமது நாட்டில் சுமார் 22 லட்சம் சிறு தொழில் பிரிவுகள் உள்ளன என்பதையும் அவற்றின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருவதையும் அறிய மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 2007 –ம் ஆண்டு சுமார் 2 லட்சம் சிறு தொழில்கள் நாட்டில் இருந்தன. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வந்து தற்போது, சுமார் 4 லட்சம் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சிறு, குறு தொழில்கள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. இவற்றில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் நடத்தும் தொழில்கள் சுமார் 40 லட்சம் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கை உயர்வு அடைய வேண்டும். இந்த பிரிவு தொழில் முனைவோரை ஊக்குவிப்பது முக்கியம்: அவர்களுக்கு தொழில்நுட்பங்களையும், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய சந்தை வசதியையும் வழங்க வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் அரசு எஸ்.சி., எஸ்.டி மையங்களை அமைத்து வருகிறது.
மத்திய அரசு வகுத்துள்ள கொள்கையின்படி, அது கொள்முதல் செய்யும் பொருட்களில் குறைந்தது 4% எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளில் இருந்து நடைபெற வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் இத்தகைய பிரிவுகளில் இருந்து செய்யப்படும் கொள்முதல் அளவு அரை சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இன்றைய தேசிய விவாதம் மாறி உள்ளது. நாம் தற்போது நிமிர்ந்து நில், தொடங்கிடு, அடைக்காக்கும் பருவம், புதுமை ஆகியவற்றைப்பற்றி பேச தொடங்யுள்ளோம். திறன்கள், தொழில்முனைவுத் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மீது செலுத்தப்படும் முக்கிய கவனம் விரைவுப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம், திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா ஆகிய அனைத்து திட்டங்களும் சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடைய வேண்டும்: ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிய பங்கைப் பெற வேண்டும். அப்போதுதான் மேம்பாடு என்பதற்கு அர்த்தம் இருக்கும்; சில பிரிவினரை சென்றடையவில்லை எனில் மேம்பாடு முற்றுப் பெறவில்லை என்பதே பொருள். திறன் மேம்பாடு முக்கியமானது: கடன் கிடைப்பது முக்கியமானது: தொழில்நுட்பத்தை தரம் உயர்த்தி அமைப்பதுவும் முக்கியமானது.
பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் மனித குலம் முழுமைக்கும் அதிகாரம் அளித்தாகப் பொருள்படும், ஏனெனில் மக்கள் தொகையில் 50% பேர் பெண்களே. பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் தவிர நாடு வளர்ச்சி அடைந்தாகக் கூற முடியாது. அதேபோல நாட்டில் வாய்ப்பு வசதிகள் மறுக்கப்பட்ட பிரிவினர் இருக்கும்வரையும், அவர்களுக்கு மேம்பாட்டு பொது நீரோட்டத்தில் சேரும் வாய்ப்பு மறுக்கப்படும்வரையும், நாடு மேம்பாடு அடைந்தாகக் கூற முடியாது. எனவே அத்தகையப் பிரிவினரை மேம்படுத்துவது எந்த அரசாக இருந்தாலும் அதன் கடமையாகும்.
இந்த முயற்சி இந்தியாவின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு ஆனது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதனை அனைவரும் புனித கடமையாக ஏற்க வேண்டும். அப்போதுதான் எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மேம்பாடு ஏற்படும்.
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அடித்தளமாகும். இந்த துறை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக மிக அதிகமான வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பெரிய அளவில் பங்களிக்கும் துறைகளில் இதுவும் ஒன்று.
பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை மீண்டும் எழுச்சி பெறும் திறனுடன் நல்ல வளர்ச்சி வீதத்தை பராமரித்து வருகிறது. இந்த வீதம் 2007-08 –ல் 11.77 சதவிதமாக இருந்து 2015 –ல் 17% ஆக உயர்ந்துள்ளது. 2015 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் இத்துறையின் வளர்ச்சி வீதம் 18.74% என்ற குறிப்பிடத்தக்க நிலையில் இருந்தது.
2022 –ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின்படி உற்பத்தி துறையின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% இருக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறையின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த துறை பின்தங்கிய மற்றும் கிராமப் பகுதிகள் தொழில்மயமாவதற்கு பங்களிப்பதுடன், மண்டல சமச்சீரின்மையை குறைப்பதற்கும் உதவுகிறது. இந்த துறை இயல்பாகவே சமன்படுத்தும் சக்தியாக செயல்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவெடுத்து தங்கள் கனவுகளை நனவாக்க பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது.
இதன் பயனாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து பல தொழில் முனைவோர் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் சரியான வழிகாட்டுதல், ஆதார வளங்கள் இன்றி அவர்களது பொருளாதார வெற்றி பாதிக்கப்படுகிறது. இதனால் அரசு கொள்கைகள் வகுத்துச் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகங்கள், துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மொத்த பொருட்கள், சேவைகள், கொள்முதலில் 20% குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறையிடமிருந்து செய்யப்பட வேண்டும் என்றும் இதில் 20% (அதாவது மொத்த கொள்முதலில் 4%) எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குச் சொந்தமான தொழில் பிரிவுகளிலிருந்து செய்யப்பட வேண்டும் என்றும் பொதுத்துறை கொள்முதல் கொள்கை கூறுகிறது என்பதை நிங்கள் அனைவரும் அறிவீர்கள்.
2012 –ம் ஆண்டிலேயே எஸ்சி, எஸ்டி பிரிவுகளிலிருந்து குறைந்தது 4% கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டு அரை சதவிததிற்கும் குறைவாகவே அவற்றிடமிருந்து கொள்முதல் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக, அரசு, தேசிய எஸ்சி, எஸ்டி மையத்தை தொழில்முறை ஆதரவு வழங்குவதற்காக உருவாக்கி எஸ்சி, எஸ்டி மக்களிடையே தொழில் முனைவு பண்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்குக் கடன் கிடைப்பதை எளிதாக்குதல், இந்த பிரிவினர் நடத்தும் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு புதிய சந்தை வசதிகளை அளித்தல், எஸ்சி, எஸ்டி தொழில் பிரிவுகள் குறித்த தகவல் சேகரிப்பு, மத்திய பொதுத்துறை தொழில் பிரிவுகள், தொழில் பிரிவு சங்கங்கள், இதர எஸ்சி, எஸ்டி தொழில் பிரிவுகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற உதவுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறு, இந்த மையங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக, நான் அறிய வருகிறேன்.
எஸ்சி, எஸ்டி பிரிவுகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு, திறன் மேம்பாடு முக்கிய தேவை. இது தொடர்பாக தேசிய எஸ்சி, எஸ்டி மையம் திறன் மேம்பாட்டு சபைகளுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு 2000 தொழில் பிரிவுகளுக்கு திறன் வளர்ப்பை உறுதி செய்ய உள்ளதாக அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நாட்டில் வாய்ப்பு வசதிகள் அற்ற சமுதாயத்தினருக்கு அதிகாரம் அளிப்பதில் பணி மேற்கொண்டுள்ள உயர்நிலைத் தொழில்கள் சங்கங்களும் அடைகாக்கும் பிரிவுகளும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளன. இதுவே ஒவ்வொருவரும் மற்றவருடன் சேர்ந்து, வாய்ப்புகள் அற்றவர்களுக்கு உதவும் நமது நாட்டு பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது.
தேசிய எஸ்சி, எஸ்டி மையத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் இந்த சங்கங்களும் தொழில் தொடங்க முன் தயாரிப்பு உதவி வழங்கும் பிரிவுகளும் பெரிய பங்கை ஆற்ற உள்ளன. ஒவ்வொரு சங்கமும் தங்களது துறை சார்ந்த தொழில் முனைவோருக்கு திறன் மேம்பாடு, நெறிகாட்டுதல் ஆகியவற்றில் ஆதரவு அளிக்க வேண்டும். தொழில் தொடங்க முன் தயாரிப்பு உதவி வழங்கும் நிறுவனங்கள் இளம் தொழில் முனைவோரின் கனவுகளை நனவாக்குவதை உறுதி செய்ய முன்வர வேண்டும்.
பொதுத்துறை கொள்முதல் கொள்கை வெற்றிகரமாக செயல்படுவதற்கு மட்டுமின்றி எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர் நன்கு வளர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் வகையில், திறன்பட்ட சுற்றுசூழல் அமைப்பை உருவாக்கவும், உரிய புதுமையான அனுகுமுறைகளை கொண்டுவரவும் உதவ வேண்டுமென்று, இந்த சங்கங்களையும், தொழில் தொடங்க முன் தயாரிப்பு உதவி வழங்கும் பிரிவுகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசு திட்டத்தைப் போலவே, மாநில அரசுகளும் கொள்முதல் கொள்கைகளை உருவாக்கி அமல்படுத்தி, குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு குறிப்பாக எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த முக்கியமான கருத்தப் பரிமாற்றத்தை ஏற்பாடு செய்த குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்திற்கு, நான் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர் புதிய மற்றும் பெரிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் காலக் கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை அமைச்சகம் உருவாக்கும் என்று நம்வுகிறேன்.
ஜெய் ஹிந்த்!
******
(Release ID: 1503776)