உள்துறை அமைச்சகம்

என்.ஐ.ஏ. தலைமை இயக்குநர், எஸ்.எஸ்.பி. தலமை இயக்குநர் நியமனம்

Posted On: 18 SEP 2017 3:19PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையின் நியமங்கள் குழு கீழ்கண்டவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

  1. மத்திய புலனாய்வுக் குழு கூடுதல் இயக்குநர் திரு. ஒய்.சி. மோடி, ஐ.பி.எஸ். (எ.எம்: 84) தேசிய புலணாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தலமை இயக்குநராக, அவர் பதவி ஏற்ற தினம் முதல் அவரது பணி நிறைவு தேதி அதாவது 31.05.2021 வரையிலான காலத்திற்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை நியமிக்கப்படுகிறார். 30.10.2017 அன்று தனது பதவிக் காலத்தை முடித்த அந்த பதவியிலிருந்த திரு. சரத் குன்னார், ஐ.பி.எஸ் (எச.ஒய்:79) (ஓய்வு) பதிலாக இந்நியமனம் செய்யப்படுகிறது.

திரு. ஒய். சி. மோடியை தேசிய புலணாய்வு முகமையின் சிறப்புப் பணி அதிகாரியாகவும் நியமனம் செய்வதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த ஒப்புதல் தேசிய புலணாய்வு முகமையின் பொறுப்புகளை உடனடியாக தடையின்றி அவர் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக இந்த நியமனம் செய்யப்படுகிறது.

 

  1. எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் தலமை இயக்குநர் திரு. ரஜினிகாந்த் மிஸ்ரா, ஐ.பி.எஸ் (யு.பி: 84) சசாத்ரா சீமா பல் (எஸ்.எஸ்.பி) அவர் பதவி ஏற்ற தேதி முதல் தமது பதவி நிறைவு காலம் அதாவது 31.08.2019 வரையோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையோ இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை இப்பதவி வகிப்பார். இப்பதவிலிருந்த திருமதி. அர்ச்சனா ராமசுந்தரம், ஐ.பி.எஸ். (டி.என்: 80) தனது பதவி காலத்தை 30.09.2017 அன்று முடித்ததால் அவருக்கு பதிலாக இந்த நியமனம் செய்யப்படுகிறது.

******

 



(Release ID: 1503393) Visitor Counter : 105


Read this release in: English