நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பழைய சரக்குகளின் மீது ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்ததற்கு பின் உள்ள அதன் விலையை அச்சடித்த
Posted On:
28 JUL 2017 5:21PM by PIB Chennai
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்ததினால் அதன் நடைமுறைக்கு முன்னே பெட்டியில் அடைக்கப்பட்ட பொருள்களின் விலை மாற்றப்பட வேண்டிய அவசியம் உள்ள நிலை சில பொருள்களைப் பொருத்த வரைத் தேவைப்படுகிறது. அரசுத்துறை விதித்துள்ள கட்டளைப்படி முன்னரே கட்டப்பட்டபொருள் உற்பத்தியாளர்கள்/ கட்டுபவர்கள்/ இறக்குமதி செய்பவர்கள் திருத்தப்பட்ட சில்லறை பொருள்களின் விற்பனை விலையை(எம் ஆர்பி) இரப்பர் முத்திரை இட்டோ அல்லது விலை குறிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை ஒட்டியோ அல்லது ஆன்லைன் அச்சிடல் மூலமோ, எப்படிமுடியுமோ அவ்வாறே , உற்பத்திசெய்யப்பட்டுள்ள விற்கப்படாத சரக்கு/ கட்டப்பட்டுள்ளது/ ஜூலை 1 2017 க்கு முன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றின் மீது எம் ஆர்பி விலையுடன் திருத்தப்பட்ட விலையும் மூன்று மாதங்களுக்கு 30 செப்டம்பர் 2017 வரையிலும் குறிக்கப்படவேண்டும். மீதமுள்ள கட்டும் பொருள்கள் அட்டைக்காகிதம் போன்றவை தேவையான திருத்தங்களை அவற்றின் மீது இட்டு 30 செப்டமபர் 2017 வரைபயன்படுத்தலாம்.
மேலும், இந்த ஆலோசனைக் குறிப்பைப் பார்க்கவும், சில்லறை விற்பனை விலையை குறைக்கும்போது ஒரு ஸ்டிக்கர் திருத்தப்பட்ட குறைவான எம்ஆர்பி (அனைத்துவரிகளும் உட்பட) பதிக்கப்படுவது உற்பத்தியாளர் அல்லது கட்டுபவர் எம் ஆர்பி குறித்து அவர்களது வெளிப்படுத்தல் லேபல்களை திருந்திய விலை லேபல் மறைக்கக்கூடாது. ஆகையால் திருத்தப்பட்ட சில்லறை விற்பனை விலை முன்னரே கட்டப்பட்டுள்ள பொருள்களின் மீது இரப்பர் முத்திரை அல்லது ஸ்டிக்கர் ஒட்டுதல் அல்லது ஆன்லைன் அச்சிடல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளதால் சில்லறை விற்பனை விலை மாற்றப்பட அல்லது திருத்தப்பட வேண்டியுள்ளது அவசியமாகிறது.
இந்தத் தகவல் மத்திய இணை அமைச்சர் நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொதுவினியோகம் திரு சி.ஆர். சௌத்தரி இராஜ்ய சபை கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் இன்று அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1502072)