பிரதமர் அலுவலகம்
பிரதமர் நாளை ராஜஸ்தான் செல்கிறார்; பல்வேறு முக்கியமான நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
Posted On:
28 AUG 2017 8:23PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதயப்பூருக்குச் செல்கிறார்.
பல்வேறு முக்கியமான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்களுக்கான மொத்த செலவீனம் சுமார் ரூ.15,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் தொடங்கி வைக்கும் திட்டங்களாவன: கோட்டாவில் சம்பல் ஆற்றின் குறுக்கே ஆறு வழிப் பாலம் அமைப்பது, தேசிய நெடுஞ்சாலை எண் 8ல் கோமதி சந்திப்பு – உதய்ப்பூர் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது, தேசிய நெடுஞ்சாலை எண்-758 ல் ராஜ்சமந்த் - பில்வாரா பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது.
ஜெய்ப்பூர் வட்டச் சாலை உள்பட பல்வேறு முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.
பின்னர், உதயப்பூரில் உள்ள பிரதாப் கவுரவ் மையத்திற்கு திரு. நரேந்திர மோடி செல்கிறார். மேவார் அரசின் புகழ்பெற்ற மன்னரான மகாராணா பிரதாப்பின் வாழ்க்கை, வீரம், சாதனைகளை விளக்கும் பொருட்கள் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
***
(Release ID: 1501067)