மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்தியாவுக்கான தகவல் பாதுகாப்புக் கட்டமைப்பு நிபுணர் குழுவுக்கு நீதிபதி கிருஷ்ணா தலைமை ஏற்கிறார்

Posted On: 01 AUG 2017 7:16PM by PIB Chennai

தகவல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், குடிமக்களின் தனி நபர் தகவல்களை பாதுகாக்கவும் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2017 ஜூலை 31 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு பி என் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவில் அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை சார்பில் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். குழுவினர் தகவல் பாதுகாப்பு பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்வார்கள்.  தகவல் பாதுகாப்பு மசோதா வரைவு ஒன்றையும் குழுவினர் உருவாக்குவார்கள்.  நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் வேகத்தை தகவல் பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



(Release ID: 1499200) Visitor Counter : 114


Read this release in: English