நிதி அமைச்சகம்

வருமான வரித்துறை தூய பணச் செயல்முறை இரண்டாம் நிலையில் அதிக ரொக்கத்தை கட்டியதற்கான கூடுதல் வழக்குகளை முன்னெடுத்துச் செல்கிறது

Posted On: 14 JUL 2017 4:18PM by PIB Chennai

வருமான வரித்துறை (வ.வ.து) வணிகச் செயல்பாட்டு அறிக்கையிலிருந்து (வ. செ. அ) பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி 5.56 இலட்சம் புதிய நபர்களை தூய பணச்செயல்முறை (தூ. ப. செ.) இரண்டாம் நிலையில் அடையாளம் கண்டுகொண்டு உள்ளது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது மேற்கண்டவர்கள் ரொக்கமாக செலுத்திய தொகைக்கும் அவர்களுடைய வருமானவரி படிவத்துக்கும் முரண்பாடு உள்ளதாக காணப்பட்டு இருப்பவர்களே இவர்கள். மற்றும் 1.04 இலட்சம் நபர்கள் தூய பணச்செயல்முறை (தூ. ப. செ) முதல் நிலையின் போது அவர்களின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மின்னணு ஒப்பிட்டுப் பார்த்தலுக்கு அளிக்காதவர்கள் என்று அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். முதல் நிலையில் 17.92 இலட்சம் நபர்கள் பெரிய தொகையை செலுத்தியவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு மின்னணு ஒப்பீட்டலுக்கு உரியவர்களாக ஆக்கப்பட்டவர்களில் 9.72 இலட்சம் நபர்கள் அவர்களின் ஆன்லைன் பதிலை சமர்பித்துள்ளார்கள்.

 

அடையாளப்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் கணக்குகள் பற்றிய தகவல் ஒரு நிரந்தர கணக்கு எண் உள்ளவரின் மின்னணுப்பதிவு சன்னல் முகப்பில் https://incometaxindiaefiling.gov.in. இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. நிரந்தரக் கணக்கு எண் உள்ளவர் பணப்பரிவர்த்தனை 2016என்ற இணைப்பில் இணக்கம்என்ற பிரிவுக்குக் கீழே முகப்பில் காணலாம். வரி செலுத்துபவர் வருமான வரி அலுவலகத்துக்குச் செல்லும் அவசியம் இல்லாமல் ஆன்லயனில் விளக்கம் அளிக்கலாம். எல்லா அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவர்களும் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் அவர்களது பதிலை ஆன் லைனில் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்படுகிறார்கள்.

 

கீழ்க்கண்ட தகவல் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கும் மனப்பாங்கை வளர்ப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது:

 

வங்கிக் கணக்கில் ரூ. 2 இலட்சமோ அல்லது அதற்கு மேலோ ரொக்கமாக செலுத்தப்பட்ட விவரம் வருமானவரி அறிக்கையில் (வவஅ) குறிக்கப்படுவது அவசியமாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் வருமான வரித்துறையிடம் உள்ள தகவலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.

 

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது வரி செலுத்துவோர் வங்கியில் ரொக்கமாகச் செலுத்திய தொகை அவர்களது வருமான வரி அறிக்கையில் (வவஅ) குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மற்றும் வருமானத்தைக் கணக்கிடும் போது இவ்வாறு ரொக்கமாக செலுத்தப்பட்ட தொகையும் கனக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

 

மேற்கண்ட காலத்தில் ரொக்கமாக செலுத்தப்பட தொகை உண்மையாகவும் முழுமையாகவும் அவையில் வெளியிடப்படவேண்டும்.

 

16 -05- 2017 ல் தொடங்கப்பட்ட தூய்மை பணச் செயல்முறை முகப்பு (https://www.cleanmoney.gov.in ) கீழ்க்கண்ட கவனத்தைக் கவரும் சிறப்புக் கூறுகளைப்  பெற்றுள்ளது:

பலவற்றை உட்கொண்டுள்ள தகவல் ஒரிடத்தில் உள்ளடக்கிய படிப்படி வழிகாட்டிகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், பயனீட்டாளர் வழிகாட்டிகள், விரைவுக்குறிப்பு வழிகாட்டிகள் மற்றும் ஒப்பிட்டுப் பார்க்கும் செயல்முறை மற்றும் மற்றைய சிக்கல்களுக்கான பயிற்சிக் கருவித் தொட்டிகள். குடிமகனின் பங்கேற்பை விளைவித்தல் வரிசெலுத்துவதை கடமையாகக் கொண்டியங்கும் சமுதாயத்தை உருவாக்கி ஒவ்வொரு இந்தியரும் வரிசெலுத்துவதில் பெருமையுணர்தல். குடிமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டும், தம்முடன் உடனிலையிலுள்ள குடிமக்களுக்கு கல்வி மற்றும் அவர்களின் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவித்தும் மற்றும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டும் மற்றும் தங்களின் பின்னூட்டதை பதிவுசெய்தும் தூய பணச்செயல் முறைக்கு ஆதரவு அளித்திடல் வேண்டும்.

 

வரிச் செயலாட்சி பளிங்கு போன்றிருக்கும் நிலையை தற்போதய நிலையைப் பகிர்ந்துகொண்டும் (தூய்மைப்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எழும் சிக்கல்களை விளக்கல்) மற்றும் கருத்துவழி பகுப்பாய்வு அறிக்கைகள் (எ.கா. வரிசெலுத்துவோர் வகைப்படி ரொக்கப்பணம் செலுத்திய தகவல்கள்).

 

*****

 



(Release ID: 1496645) Visitor Counter : 93


Read this release in: English