சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

மத்திய வாக்ஃப் கவுன்சிலின் 76 ஆவது கூட்டத்தில் திரு முக்தர் அப்பாஸ் நாக்வி பேசுகிறார்

Posted On: 29 JUN 2017 3:29PM by PIB Chennai

மத்திய துணை அமைச்சர் சிறுபான்மையோர் நலம் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்றப்பணி, திரு முக்தர் அப்பாஸ் நாக்வி இன்று இங்கே கடந்த மூன்று ஆண்டுகளில், 2000 கிரிமினல் வழக்குகள் வாக்ஃப் சொத்துக்களுக்கு எதிராக வரம்பு கடந்து செயல்படும் கும்பல்களுக்கு எதிராக மற்றும் கடுமையான நடவடிக்கை வாக்ஃப் கழகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் சிலர் மீதும் தொடரப்பட்டிருக்கின்றனஎன்று சொன்னார்.

 

வாக்ஃப் கவுன்சில் புது டில்லியின் 76 கூட்டத்தில் பேசுகின்ற போது வாக்ஃப் சொத்துக்கள் சமுதாய- பொருளாதார- கல்வி உரிமையை சமுதாயத்தின் தேவை நிலையில் உள்ள மக்களுக்கு வழங்கலுக்காக மத்தியில் உள்ள மோடி அரசின் ஆளுகையின் கீழ், இச்சொத்துக்கள் வாக்ஃப் குற்றக்கும்பல்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்று திரு நாக்வி குறிப்பிட்டார். கல்வி, சமுதாய மற்றும் திறன் வளர்ச்சியோடு தொடர்புடைய பல்வேறு திட்டங்கள் இந்தச்சொத்துக்களை பயன்படுத்தி தொடங்கப்பட இருக்கின்றன.

 

சிறு பான்மையோர் நல அமைச்சகம் நாட்டின் உள்ள எல்லா வாக்ஃப் கழகங்களும் அவைகளுடைய பதிவேடுகளும் கணினி மயமாக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்று திரு நக்வி சொன்னார். மாநில வாக்ஃப் கழகங்களை அமைப்பதற்கு அமைச்சகம் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் நல்கி வருகின்றது. வாக்ஃப் கஃழகங்கள் மற்றும் அவைகளுடைய பதிவேடுகள் ஆகியவற்றை கணினிமயமாக்குதல் வெளிப்படைத் தன்மை வர உதவிசெய்து உறுதிசெய்யும்.

 

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரைத்தலைவராகக் கொண்டு வாக்ஃப் சொத்துக்கள் தொடர்பான புகார்கள் மற்றும் பூசல்கள் ஆகியவற்றை விசாரித்து தேசிய அளவில் ஒரு நபர் நீதிக்கழகம் நிறுவப்படும் என்று திரு நக்வி சொன்னார். மூன்று உறுப்பினர் கொண்ட உயர் முறை மன்றங்கள் மாநில அளவில் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது வரை 21 மாநிலங்கள் இத்தகைய உயர்முறை மன்றங்களை நிறுவி உள்ளன. மற்ற மாநிலங்களும் விரைவில் இதைச்செய்ய வேண்டும். நாடு முழுவதும் உத்தேசமாக 512556 பதிவுசெய்யப்பட்டதும் செய்யப்படாததுமான வாக்ஃப் சொத்துகள் இருக்கின்றன. இந்த எண் வாக்ஃப் சொத்துக்களெல்லாம் கணினி மயமாக்கப்பட்ட பிறகுஅதிகரிக்கலாம்.

 

மற்றும் திரு நக்வி குறிப்பிட்டார் சிறுபான்மையோரான இஸ்லாமியர், கிருத்துவர், சீக்கியர், பாரசசீகத்தவர் மற்றும் சமணர் ஆகியோர் நல அமைச்சகம் எல்லா  அறிவிக்கப்பட்ட சிறுபான்மையோரின் சமூக-பொருளாதார கல்வி உரிமை வழங்கலுக்கான உறுதி மற்றும் குறிக்கோள்களை கொண்டு இயங்கி வந்து கொண்டு இருக்கின்றது.

 

திரு நக்வி மேலும் சொன்னார் மதிப்புக்குரிய பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அரசின் சமாதானப்படுத்துதல் இல்லாமல் உரிமைவழங்கல்கொள்கையை விளக்குவனவாக உள்ளன. திரு நக்வி சொன்னார் சிறுபான்மையோர் நல அமைச்சகம் சிறுபான்மையோரில் எழைகள், பிந்தங்கிய மற்றும் நலிந்த பிரிவினர் முதன்மையோடை வளர்ச்சியில் ஒருபகுதியைப் கல்வி, தொழில் மற்றும் உரிமை வழங்கல் ஆகியவற்றின் முலாமாக பெறுச்செய்வதில் வெற்றியுடன் இயங்கி வந்து கொண்டிருக்கிறது.

 

திட்டங்கள்/ நிகழ்வுகளான கரிப் நவாஸ் திறன் வளர்ச்சி மையம்” , ”உஸ்தாத்நைமன்ஷல்,, ”நை ரோஷ்னி”, ”சீக்கொ மற்றும் காமோ”, ”பதாவ் பார்தே” , ”முன்னேற்றம் அளிக்கும் பஞ்சாயத்து” , ”ஹுனார் ஹாத்”, ”பல்முனை சப்தாவ் மண்டபம்” , ”பிரதம மந்திரியின் புதிய 15 அம்ச திட்டம்”, “பல்முனை வளர்ச்சி நிகழ்வு”, ”பெண் குழந்தைகளுக்கான பேகம் ஹசார்ட் மஹால் கல்வி உதவித்தொகைமுதலியன சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும்கண்களில் ஒளியையும் வாழ்வில் வளத்தையும்உறுதிசெய்துள்ளன என்று திரு நக்வி சொன்னார்.

 

ஆயிரக்கணக்கான சிறுபான்மை இனத்தவரின் பள்ளிகள் மற்றும் மதரசாஸ்கள் 3 டீஸ்களான ஆசிரியர்கள், சிற்றுண்டி, கழிவறைகள் அகியவற்றுடன் கடந்த மூன்று மாதங்களில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்கள் குருதுவாராக்களால் நடத்தப்படும் நிறுவனங்களையும் மற்றும் சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சீக்களால் நடத்தப்படும் நிறுவனங்ளையும் உள்ளடக்கும் என்றும் திரு நக்வி சொன்னார். ,

 

*****



(Release ID: 1494586) Visitor Counter : 108


Read this release in: English