அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய பிரதிநிதிக்குழு உயிர்தொழில்நுட்பவியல் புதுமை அமைப்பின் அனைத்துலகப் பேரவை 2017 நிகழ்வில்

Posted On: 20 JUN 2017 2:57PM by PIB Chennai

உயிரி தொழில் நுட்பவியல் புதுமை அமைப்பு மாநாடு (BIO) 2017 சான் டியாகோபேரவை, சாண்டியாகோ வில் ஜூன் 19 முதல் ஜுன் 22 வரை பேரவை மையத்தில் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. (BIO) 2017 ல் பங்குபெறும் பிரதிநிதிக்குழுவின் தலமைப் பொறுப்பை திரு. ஒய் எஸ் சௌத்திரி , மத்திய இணை அமைச்சர் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் மற்றும் பூமி அறிவியல் ஏற்று நடத்திக்கொண்டு உள்ளார். அத்தகு பொறுப்பின் ஒரு பகுதியாக , அமைச்சர் ஜாகோப் பொறியியல் பள்ளி சான் சாண்டியாகோ , கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வளாகத்தை 19 ஜூன் 2017 ல் இந்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களில் பலர் இந்தியாவை வேறாகக் கொண்டவர்கள், ஆகியோருடன் கலந்தாலோசிப்பதற்காக வருகை தந்தார்.

திரு. ஒய். எஸ். சௌத்திரியை வரவேற்கு முகத்தான் முனைவர் ஆல்பர்ட் பிசானோ, ஜாகோப் பொறியியல் பள்ளியின் தலைவர், லிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ இந்தியாவுடன் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலோடு தொடர்புடைய பலதுறைகளில் இணைந்து செயல்புரிவதின் அவசியத்தை வலியுறுத்தினார். முனைவர் பிசானோ, மேல்முடிவிலுள்ள இந்திய அறிஞர்களின் அறிவியல் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி நாட்டில் உள்ள தொற்றுநோய்களுக்காக கவலைப்புரிந்துணர்வு மற்றும் சோதனைக்கூட சிறு துண்டுவெட்டு புரிந்துணர்வு, ஆகிய துறைகளில் தொழில்நுட்ப யியல்களின் வளர்ச்சியை வலியுறுத்தினார். பகசாடி தண்டு உயிரணு பொறியிலில் வலுவான நிலையைப் பெற்றுள்ளதால் அது இணந்து செயலாற்றலுக்குள்ள பகுதியாக தாய் நலம் மற்றும் வயோதிகம் ஆகியவற்றோடு கூட உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்

திரு. ஒய். எஸ். சௌத்ரி அவருடைய உரையில் ஆய்வு வளர்ச்சிக்கும் மற்றும் அவற்றின் விரிவாக்கத்துக்கும் வழிகாட்டியாக உள்ள மூலக்குறு ஆகிய பல்வேறு பகுதிகளை முன்னிலைப்படுத்தி இந்தியச் சூழலில் அதிக உள்ளாற்றலுடைய திறவுகோல் சொற்கள் திராணி கொண்டிருத்தல் மற்றும் பராமரிப்பு என்றும் கூறினார். இந்தியா எதிர்மாறான தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் மூல ஆய்வுத்திறன் நிறைந்து வழிந்து கொண்டிருக்கிற நிலையில் உள்ளது . அதற்கு மூல காரணம் ஆய்வு மனப்பாங்கை உயர்த்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளும் அவற்றைச் செயற்படுத்த அரசாங்கம் எடுக்கும் கையாளும் தன்மைகளுமாகின்றன. அவர் மாணவர்களை வளர்ச்சி உள்ளடக்கிய பகுதிகளில் எதிர்காலத்தில் தொழில் மனை தொடங்கும் வல்லமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்று கூறி கேட்போருக்கு இந்திய அரசாங்கம் இதுசார்ந்த நடைமுறையில் வைத்துள்ள திட்டங்களான இராமலிங்கசாமி தோழமை கூட்டிணைப்பு, டி.எஸ்.டி (அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை) ஊக்குவி திட்டம், டிபிடி ( உயிர் தொழில்நுட்பத்துறை ) வரவேற்பு நம்பிக்கை தோழமை கல்விக் கழகம் மற்றும் , ஐ ஒய் பி எ ( முன்னோடி இளமை உயிர் தொழில்நுட்ப விருது) இங்கு குறிப்பிடப்படுவதற்கான ஒரு சில திட்டங்கள் என்றும் கூறினார். இத்தகைய திட்டங்கள் வெளி தேசங்களில் உள்ள இந்திய ஆய்வாளர்கள் இந்தியாவுக்கு வந்து அவர்களது முனைவர்பட்ட ஆய்வுக்கு பிந்திய ஆய்வுகளில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களுக்கு உதவுவனவாகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கு உகந்த ஆய்வுசிக்கல்களை தீர்க்க தேவையான வசதிகள் குறித்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் உறுதிபடக்கூறினார்.

உயிரி தொழில் நுட்பவியல் புதுமை அமைப்பு அனைத்துலக மாநாடு உயிர் தொழில் நுட்ப தொழிலைச்சார்ந்த உலகிலேயே பெரிய நிகழ்ச்சி மற்றும் உயிர் தொழில் நுட்பத்தில் ஈடுபாட்டில் உள்ள மிகப் பெரிய பெயர்களையெல்லாம் கவர்கிறது. மேலும் இம்மாநாடு இந்தத் தொழிலை பாதிக்கும் போக்குகளுக்கு ஊக்கமும் உள்பார்வையும் அளிக்கிறது. இந்த நிகழ்வு அடிப்படைக்கருத்துக்களையும் மற்றும் அமர்வுகளையும் அடிப்படைக் கொள்கை உருவாக்குபவர்களையும் ,அறிவியலாளர்களையும், முக்கிய செயல்பாட்டாளர்களையும் மற்றும் புகழ்பெற்றோரையும் ஈடுபடுத்துகிறது. இம்மாநாடு பிஐஓ தொழிலமைப்பு (ஒன்றோடு ஒன்று என்ற நிலையில்), உயிர்தொழில்நுட்பத்தின் போக்குகளுக்கெல்லாம் இடமளித்து நூற்றுக்கணக்கான அமர்வுகளில், கொள்கை விளக்கங்களையும், தொழில்நுட்ப புதுமைகளையும் மற்றும் உலகத்தின் மிகப்பெரிய உயிர் தொழில்நுட்ப கண்காட்சியையும் உள்ளாக்கி நடத்துகிறது. பிஐஓ முதலாவது அனைத்துலக மாநாடு 1993 ல் நடத்தப்பட்டது ஏறக்குறைய 1400 பங்குபெற்றோரை ஈர்த்தது.

உயிரி தொழில் நுட்பவியல் புதுமை அமைப்பு அனைத்துலக மாநாடு உயிர் தொழில்நுட்ப அமைப்பால் (பயோ) நடத்தப்படுகிறது. பயோ 1100 க்கு மேற்பட்ட உயிர் தொழில்நுட்ப கம்பெனிகளையும், கல்வி நிறுவனங்களையும் , மாநில உயிர் தொழில்நுட்ப மையங்களையும் மற்றும் தொடர்புடைய யூ எஸ் ஏ யில் குறுக்கே அமைந்துள்ள அமைப்புகளையும் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளையும் பிரதிபலிக்கிறது. பயோ உறுப்பினர்கள் ஆய்வு மற்றும் புதுமை நலம்பேணும் முயற்சிகளின் வளர்ச்சி, விவசாயம், தொழில் சார்ந்த மற்றும் சுற்றுச் சூழல் சார்ந்த உயிர் தொழில்நுட்பவியல் விளைவுகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். பிஐஓ அதன் உறுப்பினர்களுக்கு பல பணிகளைச் செய்கிறது ஆனால் அவர்களில் ஒருவர் கூட பிஐஓ அனைத்துலக மாநாட்டைவிட அதிகமாக பார்வைக்குத்தெரிவதில்லை. பிஐஓ அனத்துலக மாநாடு பிஐஓக்கு உலகளவில் உயிர் தொழில் நுட்பத்தொழில் வளர உதவுகிறது. பிஐஓ அனைத்துலக மாநாட்டில் இருந்து வரும் இலாபம் உயிர் தொழில்நுட்ப தொழிலுக்கு பிஐஓவின் நிகழ்ச்சிகளுக்கும் முயற்சிகளுக்கும் ஆதரவு நல்கி திருப்பி அனுபப்படுகிறது. பிஐஓ தக்க கொள்கைச்சூழலை உருவாக்கி அது உலகை உயிர் தொழில்நுட்பவியல் புதுமைகளால் சீர்செய்யும் அதனுடைய நோக்கத்தை நிறைவேற்ற உதவிட ஆண்டு முழுவதும் வேலை செய்கிறது.

உயிரி தொழில் நுட்பவியல் புதுமை அமைப்பு அனைத்துலக மாநாட்டில் பங்கு பெறுவதால் கிடைக்கும் முக்கிய நலன்கள் உலகளாவிய உயிர்தொழில்நுட்பத்தை அடைதல் மற்றும் மருந்து தலைவர்கள் BIO ஒருவரோடு ஒருவர் பங்கேற்றல் , தொழில் வெளிப்பாட்டை அறிதல் -- 1500க்கு மேற்பட்ட கல்வி அமர்வுகளுடைய கருத்தாளர்கள் உங்களின் விரல் நுணியில் இருந்தாலும், மற்றும் ஒப்புவுயர்வற்ற 16000+ இணையகலந்தலுவலாற்றும் வாய்ப்புகள் அத்துடன் 76 நாடுகளின் பங்கேற்பாளர்கள் ஆகியனவாக இருக்கின்றன. இந்தியா 2017 ம் ஆண்டின் BIO -வில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறது.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/jun/i201762012.jpg

http://pibphoto.nic.in/documents/rlink/2017/jun/i201762013.jpg

http://pibphoto.nic.in/documents/rlink/2017/jun/i201762014.jpg

 

*******



(Release ID: 1493523) Visitor Counter : 232


Read this release in: English