மத்திய அமைச்சரவை
புதுதில்லி, துவாரகா, செக்டார் 24-ல் உள்ள 34.87 ஹெக்டேர் நிலத்தை தில்லி மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு இரண்டாவது தூதரக பகுதியை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதற்காக மாற்றியளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
प्रविष्टि तिथि:
04 JAN 2017 4:20PM by PIB Chennai
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவை புதுதில்லி, துவாரகா, செக்டார் 24-ல் உள்ள 34.87 ஹெக்டர் நிலத்தை தில்லி மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு இரண்டாவது தூதரக பகுதியை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதற்காக மாற்றியளிப்பதற்கு ஒப்புதல் வழங்கியது.
தற்போது, சாணக்கியபுரியில் மட்டுமே தூதரக பகுதி உள்ளது, அதன் நிலம் அனைத்து தூதரகங்களுக்கும் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் தூதரக அலுவலகங்கள் / பன்னாட்டு நிறுவனங்கள் தில்லியில் தங்கள் அலுவலகங்கள்/ தூதரகங்களை கட்டிக் கொள்வதற்கு அதிக நிலம் தேவைப்படுவதாக தெரிவித்தது. இதற்காக, தில்லி மேம்பாட்டு ஆணையம், புதுதில்லி, துவாரகா, செக்டார் 24-ல் உள்ள 34.87 ஹெக்டேர் நிலத்தை தில்லி மேம்பாட்டு ஆணையம் கண்டறிந்து, அதனை நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு மாற்றி வழங்கும். இது தில்லியில் இரண்டாவது தூதரக பகுதியை உருவாக்க நிலம் அளிக்கும்.
****
(रिलीज़ आईडी: 1480015)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English